2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மருதமுனை பொது நூலகத்திற்கு பயன்படுத்தப்பட்ட நூல்கள் அன்பளிப்பு

Super User   / 2012 மே 06 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


மருதமுனை பொது நூலகத்திற்கு தனிநபரொருவரினால் பயன்படுத்தப்பட்ட நூல்கள் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அன்பளிப்பு செய்யப்பட்டன.

மருதமுனையை சேர்ந்த ஏ.ஆர்.ஏ.சத்தாரினால் பாவிக்கப்பட்ட ஒரு தொகுதி புத்தகங்களே நூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி மற்றும் மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நூலகத்தின் அபிவிருத்திக்காக மூன்று இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாக  மேயர் சிராஸ் இதன்போது உறுதியளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .