2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபையினால் காலை மற்றும் மாலை என திண்மக் கழிவகற்றல் செயற்பாடு

Super User   / 2012 மே 06 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபையினால் முதற் தடவையாக மே மாத நடுப்பகுதி முதல் காலை மற்றும் மாலை என திண்மக் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெறவுள்ளது என மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

இதன் மூலம் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டினை மேலும் துரிதப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் செயற்பாடு தொடர்பாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் பற்றி கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் சுகாதார பிரிவு ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் கல்முனை மாநகர சபையால் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை திறன்பட மேற்கொள்வதில் சுகாதார பிரிவு ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு, மேயரினால் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

தினமும் காலை 7.00 மணிக்கு திண்மக் கழிவகற்றும் பணி ஆரம்பிக்கப்பட வேண்டும் என இதன்போது மேயர் சிராஸ் சுகாதார பிரிவு ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .