2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுடன் ஹரீஸ் எம்.பி. பேச்சு

Super User   / 2012 மே 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அமெரிக்காவிலுள்ள பல தொண்டர் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தற்போது அமெரிக்காவிற்கான விஜயம் மேற்கொண்டுள்ள திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

விவசாய, மீன்பிடி மற்றும் ஆடைத்தொழில் ஆகிய துறைகளை அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமெரிக்காவிலுள்ள பல சர்வதேச தொண்டர் நிறுனங்களின் பிரநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், கல்முனை மாநகரத்தையும் அமெரிக்காவின் மாநகரமொன்றையும் இணைப்பது தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்தார்.

இந்த இணைப்பின் காரணமாக இரு மாநகரங்களுக்கிடையிலான இளைஞர் பறிமாற்றம் தொடர்பிலும் பேச்சு நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0

  • anusan Thursday, 10 May 2012 01:46 PM

    ilaliyai inaiththu mudiththu viddaar. ippothu america.... inaikkap poraar

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .