2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் ஐவர் காயம்

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியின் அட்டப்பள்ளம் பகுதியில் முச்சக்கர வண்டியொன்று தலைகீழாகப் புரண்டதில் சாரதி உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்படி முச்சக்கர வண்டியானது கட்டுப்படுத்த முடியாத வேகத்தின் காரணமாகவே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற போது வண்டியில் பெண்கள் மூவரும், இரண்டு வயதுக் குழந்தையொன்றும் பயணித்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .