2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு இரத்த தான நிகழ்வு

Super User   / 2012 மே 07 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


சர்வதேச தாதியர் தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை இரத்த தான நிகழ்வொன்று இடம்பெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செயயப்பட்ட மேற்படி இரத்த தான நிகழ்வில் - குறித்த வைத்தியசாலையில் கடமை புரியும் சுமார் 20 தாதியர்கள் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினர்.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் - வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டொக்டர் எம்.ஐ. சிறாஜ் உள்ளிட்ட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஓவ்வொரு வருடமும் மே 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .