2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் உபவீதி அமைக்கும் பணி

Suganthini Ratnam   / 2012 மே 08 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

மீனவர்களின் நன்மை கருதி அட்டாளைச்சேனையின் 08ஆம் பிரிவு கடலோர வீதியிலிருந்து உபவீதியொன்றை அமைக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேசசபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ் இவ் உபவீதி அமைப்பதற்கான செலவை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கியுள்ளார்.

உபவீதியொன்று இன்மையால், இப்பகுதி மீனவர்கள் தமது மீன்களை கரையிலிருந்து வீதிவரை கொண்டுவருவதற்கு சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். இந்த நிலையில்,  இப்பகுதி மீனவர்கள் பிரதேசசபை உறுப்பினர் முனாஸிடம,; உபவீதியொன்றை அமைத்துத் தருமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் தனது சொந்த நிதியிலிருந்து உபவீதி அமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்.

இதற்கான ஆரம்ப நிகழ்வில் இப்பகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளைக்குழுவின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • shakiras Saturday, 12 May 2012 04:07 PM

    thanks munas sir. ungalin sabaium addalaichenai pirathasathin afiviruthi man melum valara iraivanin aasihal.

    Reply : 0       0

    noor faris Saturday, 21 July 2012 09:53 AM

    வேணும்தான் ரோட்டு ஆனா வர்ர மாறிக்குப் பிறகுதான் சொல்லனும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .