2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத மதுபான விற்பனை செய்த ஹோட்டலுக்கு அபராதம்

Super User   / 2012 மே 09 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

பொத்துவில், அறுகம்பையிலுள்ள பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபான விற்பனை செய்தமைக்காக பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை 15இ000 ரூபா தண்டப்பணம் விதித்துள்ளது.

தற்போது பொத்துவில் பிரதேசத்தில் உல்லாச காலம் என்றபடியால் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகளவில் காணப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகளில் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் மது வரி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட கிளையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த முதலாம் திகதி நடத்தப்பட்ட சோதனையின் போது ஹோட்டல் ஒன்றில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக மது வரி திணைக்கள பிரதான பரிசோதகர் சண்.தங்கராசா தொவித்தார்.

இதனடிப்படையில் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் குறித்த நபருக்கு 15,000  ரூபா தண்டப்பணம் விதித்தார். கடந்த ஆண்டு இதே போன்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பலருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாக பரிசோதகர் சண்.தங்கராசா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .