2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பள்ளிவாசல் தாக்குதலை கண்டித்து அக்கரைப்பற்று மாநகரசபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 மே 10 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை மற்றும் அந்தப் பள்ளிவாசலை குறித்த இடத்திலிருந்து அகற்றும் முயற்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரைப்பற்று மாநகரசபையில் ஏகமனமான கண்டனத் தீர்மானமொன்று இன்று நிறைவேற்றப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று காலை மேயர் தலைமையில் மாநகரசபைக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த கண்டனத் தீர்மானமானது ஏகமனதாக நிறைவேறியது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பான எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி – தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை மற்றும் பள்ளிவாசலை அகற்றும் முயற்சிகளுக்கு எதிராக - இன்றைய அமர்வில் கண்டனத் தீர்மானமொன்றினை நிறைவேற்றும் படி, அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆணையாளருக்கு கடந்த 2ஆம் திகதி கடிததொன்றின் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மாநகர மேயர் ஷக்கி அதாவுல்லா முன்வைத்த கண்டனப் பிரேரணையை சபை ஏகமனதாக நிறைவேற்றியது. அக்கண்டனப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த 20.04.2012 வெள்ளிக்கிழமையன்று தம்புள்ள ஹைரியா ஜூம்ஆப் பள்ளிவாசல் மீது ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அராஜக செயலானது நமது முஸ்லிம் மக்களின் மனங்களை மாத்திரமன்றி இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூக மக்களின் மனங்களையும் வெகுவாக பாதித்திருக்கின்றது. இவ்வராஜகச் செயலை புரிந்த குழுவினருக்கு இச்சபையில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நமது நாட்டில் வாழுகின்ற எல்லா இன மக்களும் சுதந்திரத்தோடு அச்சமின்றி வாழவேண்டுமென்று அர்ப்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பவர் நமது மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். அவரின் தொடர்ச்சியான எத்தனங்களினால் தான் நீண்ட நெடுங்காலமாக நம்மை பீடித்திருந்த பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாட்டிலும் குறிப்பாக வடக்கு கிழக்கில் மூன்று சமூகங்களும் நிம்மதிப் பெருமூச்சோடு வாழ்வது மாத்திரமல்லாமல், மத வழிபாட்டு தலங்களும் உயிரோட்டமுள்ளதாக மீண்டிருக்கின்றது.

இது இவ்வாறிருக்க மனித உரிமைகள் மீறல் தொடர்பாகவென்று இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டிருந்தது. இது இலங்கை தொடர்பான வௌ;வேறு அபிலாஷைகளை பின்புலத்தில் கொண்டிருக்கும் ஏதகாதிபத்தியவாதிகள் இலங்கை மக்களையும், அரசையும் அகௌரவப் படுத்துவதற்கு எடுத்துக்கொண்ட கூட்டு முயற்சியாகும்.

இச்சந்தர்ப்பத்தின் போது அரபு நாடுகள் நமது இலங்கை நாட்டிற்கு ஆதரவு வழங்கியிருந்தது வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாகும். இது தொடர்பாக  மேதகு ஜனாதிபதி அவர்களும் நாட்டு மக்களும் அரபு நாடுகளுக்கு நன்றி தெரிவித்திருந்தனர். மேலும் மேதகு ஜனாபதி அவர்கள் முஸ்லிம் மக்கள் மீது பண்மடங்கு அன்பு காட்டும் ஒரு சூழலும் உருவாகியது.

இவ்வேளையில்தான் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை தூண்டியும் மக்களை வேதனைப்படுத்தியதுமான செயலாக தம்புள்ள பள்ளிவாலுக்குகெதிரான சம்பவம் தூபமிடப்பட்டிருக்கின்றது. 

இனக் கலவரங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்நாட்டை குழப்புவதற்கு முனைகின்ற தீய சக்திகளும், இனத்துவேசங்களை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபங்களை பெற நினைக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகளும் அறபுநாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவினை மீள பெறவைக்க நினைக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சூழ்சச்சிகாரர்களும் இதற்கு பின்னால் தொழிற்பட்டிருக்கலாம் என்று நமது நாட்டில் வாழ்கின்ற புத்திஜீவிகளும், நிதானமாக சிந்திக்கின்ற  அரசியல் தலைமைகளும் திடமாகவே நம்புகின்றனர். இச் சதிகாரர்களுக்கும் இச்சபையில் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உணர்வுகள் பீறிட்ட நிலையிலும், இவ்வாறான சூழ்ச்சிக் கும்பல்களின் சதிவலைக்குள் நமது மக்கள் மாட்டிக் கொள்ளாமலும் தேவையில்லாத அனர்த்தங்கள் இடம்பெறலாமலும் காத்த அல்லாஹ்விற்கு சுக்ர் செய்கின்றேன்.

இது தொடர்பாக பொறுமையாக இருக்குமாறு  மக்களை வேண்டிக் கொள்கின்றேன். ஜனாபதிபதிக்கும் அரசாங்கத்தினதும் நடவடிக்கைகள் மூலம் இன்றுவரை அப்பள்ளிவாசலில் தொடரச்சியாக தொழுகை நடந்து கொண்டிருப்பது எமக்கெல்லாம் ஆறுதலைத் தந்தாலும்.

இச்சம்பவத்தில் பின்னணியிலிருக்கின்ற சூழ்ச்சிக்காரர்களைக் கண்டு பிடிப்பதோடு இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு முறையான நடவடிக்கைகளை மேதகு ஜனாபதிபதி அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோளையும் இச்சபையில் முன்வைக்கின்றேன்.

You May Also Like

  Comments - 0

  • naseer Friday, 11 May 2012 09:59 AM

    oh appadiya

    Reply : 0       0

    ummpa Saturday, 12 May 2012 02:31 AM

    After long time some one appearing!

    Reply : 0       0

    pottuvilan Saturday, 12 May 2012 07:13 AM

    nalla oottunga kundu sattiyila kuthiraiyai.

    Reply : 0       0

    razeek Sunday, 13 May 2012 02:09 AM

    எங்க போனாங்களாம் இவ்வளவு நாளா? சக்கறாத்துக்கு தேன் வாங்க விட்டா மைய்யத்துக்குதான் வருவாங்க. வந்தமா மையத்த பாத்தமா போகவேண்டியதுதானே. அவர் நல்லவர் என்று இவுக சட்டிபிகட் குடுங்காங்க. திருந்தவேமாட்டாங்க.

    Reply : 0       0

    Moha Sunday, 13 May 2012 03:35 AM

    That’s what we always saying you will Take Time understand about everything.
    Mr.Saki You have learned from your father.

    Reply : 0       0

    jayaroopan Sunday, 13 May 2012 04:11 AM

    thambi pottuvilan neenka kundu satti kundu satti endu sollikku irugko

    Reply : 0       0

    AHAMED Sunday, 13 May 2012 05:43 AM

    என்ன நடந்த வாப்பா, இப்பான் கண்முழிச்சா? ,............................ இதல்லாம் வேண்டாம் படுங்கோ படுங்கோ ஆராரோ............. ஆராரோ ..............

    Reply : 0       0

    Hari Sunday, 13 May 2012 05:30 PM

    It is only the Opposition leader of Akkkaraipattu MCC broughtt in the issue to MC.

    But they were the politician who did not want the people of Akkaraipttu to protest against this case then. They said the mosque was not broken , only two tiles. How can they now say so?

    Reply : 0       0

    IBNUABOO Monday, 14 May 2012 04:54 PM

    ithu etho arasankaththukku theriyaama nadantha thakkuthal enru kathaya chodiththu janathipathiyatym mechipukalnthu kandanamaam kandanam , nalla KOOTHTHURAA THAMPI ITHU.

    Reply : 0       0

    A Basithbdul Tuesday, 15 May 2012 04:37 AM

    கண்ணா எப்பவே செய்யவேண்டியதை இப்ப சொல்லத்தேவையில்லை. அதுகூட எதிர்க்கட்சித்தலைவரின் வற்புறுத்தல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .