2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய பாடநெறிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் முதுமாணி பட்டப்பின்படிப்பு பிரிவு ஒழுங்கு செய்திருந்த முகாமைத்துவ பட்டபின்படிப்பு டிப்ளோமா மற்றும் வியாபார நிர்வாக முதுமாணி ஆகிய பாடநெறிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பட்டப்பின்படிப்பு பிரிவின் இணைப்பாளர் கலாநிதி ஆதம்பாவா ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மலேசியா பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் டாக்டர் அலி கதிபி, இலங்கை உல்லாச மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி டீ.ஏ.சி.சுரங்கா சில்வா, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி எம்.பி.எம்.அம்ஜத், சிரேஷ்ட விரிவுரையாளர்களான திருமதி எப்.எச்.அப்துல் றவுப், கே.எம்.முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .