2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

விநாயகபுரம் பகுதியிலுள்ள பொலிஸ் காவலரணை அகற்றி மீளவும் பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 மே 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


விநாயகபுரம் பஸ் நிலையத்தில் இயங்கி வந்த பொலிஸ் காவலரண் அங்கிருந்து அகற்றப்பட்டு குறித்த பஸ் நிலையத்தினை மீளவும் ஆரம்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன நேற்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

கடந்த 20 வருடங்களாக மேற்படி பஸ் நிலையமானது பூட்டப்பட்ட நிலையிலிருந்த அதேவேளை, அந்தக் கட்டிடத்தில் பொலிஸ் காவலரணொன்று இயங்கி வந்தது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன மேற்கொண்ட முயற்சியின் காரணமாக குறித்த பொலிஸ் காவலரண் அங்கிருந்து அகற்றப்பட்டு, பஸ் நிலையம் மீளவும் இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பஸ் நிலையத்தின் புனர்நிர்மாணப் பணிகள் - நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் நிதியின் கீழ் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அக்கரைப்பற்று பேரூந்து சாலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மேற்படி விநாயகபுரம் பஸ் நிலையம் - எதிர்வரும் வாரத்தில் மீளவும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.

பஸ் நிலையத்தினைப் பார்வையிடுவதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுடன், இலங்கை போக்குவரத்து சபையின் கிழக்கு மாகாண பிரதான பிராந்திய முகாமையாளர் எம்.என்.எச்.எம்.நசீர், கல்முனை பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம், அக்கரைப்பற்றுசாலையின் செயலாற்று உதவி முகாமையாளர் எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எஸ்.தீபன் உள்ளிட்டோரும் விஜயம் செய்திருந்தனர்.



You May Also Like

  Comments - 0

  • samari Sunday, 13 May 2012 04:41 PM

    கதையை விட்டிட்டு வேலையை மட்டும் செய்யுங்கள் ஐயா.

    Reply : 0       0

    Kuhan Friday, 18 May 2012 05:49 AM

    சும்மா கதைத்துக் கதைத்து மக்களை உசுப்பேத்துவதற்கென்று தமிழ் மக்கள் சார்பில் ஒரு கட்சி இருக்குது. அவங்க உசுப்பேத்தி உசுப்பேத்தியே தமிழ் சனத்த வீதிக்குக் கொண்டு வந்துட்டாங்க. ஆனா, இந்த மனுசன் பியசேன மக்களுக்கு ஏதோ நல்லதுகளைச் செய்து கொண்டிருக்கிறாரு. வாழ்த்துக்கள் ஐயா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .