2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குப்பைகள் முறையாக அகற்றப்படாமையால் சாய்ந்தமருது மக்கள் விசனம்

Menaka Mookandi   / 2012 மே 12 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

சாய்ந்தமருது பிரதான வீதிக்கு அண்மையிலுள்ள பொது நூலக வீதியின் ஓரங்களில் குப்பைக் கூலங்கள், கழிவுப்பொருட்கள் போடப்படுவதனாலும் இவை முறையாக அகற்றப்படாதமையினாலும், நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக இப்பகுதி வாழ்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இக்கழிவுப் பொருட்கள் குவிக்கப்படும் இவ்இடத்திற்கு அண்மையில் பாடசாலை, வைத்தியசாலை, பொதுநூலகம், விதாதா வள நிலையம், சமுர்த்தி அலுவலகம், தொழில் பயிற்சி நிலையம், முன்பள்ளி பாடசாலை போன்றன காணப்படுகின்ற போதிலும் இதனைத் தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகள் எதுவும் மாநகர சபையினாலும், சுகாதார பணிமனையினாலும் மேற்கொள்ளவில்லை என இப்பிரதேசவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் இக்கழிவுப்பொருட்களை உடன் அகற்றுவதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதுடன் இவ்விடத்தில் கழிவுப்பொருட்கள் குவிககப்படுவதை தடைசெய்ய வேண்டும் எனவும் இப்பகுதி வாழ்மக்கள் கோருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • abdullah Saturday, 12 May 2012 02:54 PM

    unmail ithu varavetkaththakka seyal. alhamthulillah ithu ponru udanukkudan nadavadikkai edukkappadavendum.

    Reply : 0       0

    sainthamaruthan Saturday, 12 May 2012 03:20 PM

    manahra sabai sainthamaruthil ulla kuppaihalai uriyamuraiyil ahatra nadavadikkai edukkamaiye ithadkaana kaaranam. oorukku mayere ithai parkathathan kaaranam enna?

    Reply : 0       0

    uvais.m.s Saturday, 12 May 2012 05:56 PM

    சீக்கிரம் அகற்றுங்கப்பா நாத்தம் தாங்க முடியவில்லை

    Reply : 0       0

    ummpa Sunday, 13 May 2012 03:28 AM

    We have to appreciate Mr.Azeez & Tamilmirror too. It's sould read by MAYOR and he will do somthing behind his area.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .