2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனையில் சர்வதேச தாதியர்தினம்

Suganthini Ratnam   / 2012 மே 13 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச தாதியர்தினம் நேற்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வைத்தியசாலையின் தாதிய நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தாதிய சேவையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வைத்தியசாலையின் தாதிய நலன்புரிச் சங்கத்தின் தலைவர் க.அழகரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கலாநிதி டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் பிரதம அதிதியாகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீடத்தின் தாதியர் பட்டப்படிப்புத் துறையின் தலைவர் கலாநிதி அருட்சகோதரி ஜோசவ்வா விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் தாதியர் சேவைக்கு அடித்தளமிட்ட புளோரன்ஸ் நைற்றிங்கேள் அம்மையாரின் உருவப்படத்துக்கு மலர் மாலை சூட்டப்பட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. அத்துடன், தாதியர்கள் சத்தியப்பிரமாணத்தினை நினைவுகூர்ந்தனர். இதன்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதிய நலன்புரி சங்கத்தினால் உருவாக்கப்பட்ட சர்வதேச தாதியர் தின சிறப்பிதழும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 

நிகழ்வில், சர்வதேச தாதியர்தினத்தினையொட்டி கடந்த 07ஆம் திகதி இரத்ததானம் வழங்கிய தாதியர்கள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .