2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி பயனாளிகளுக்கு காசு புத்தகம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 மே 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

சமுர்த்தி பயனாளிகளின் உணவு முத்திரைக்கு பணம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்தி பயனாளிகளில் ஒரு தொகையினருக்கு காசு வைப்பிடப்பட்ட வைப்புக் கணக்குப் புத்தகம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

வடக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாசித் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசுப் புத்தகங்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் யூ.கே.எம்.நளீம், கணக்காளர் எஸ்.கனகரெட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் 5808 சமுர்த்திப் பயனாளர்கள் மேற்படி காசுப் புத்தகத்தினைப் பெறவுள்ளனர்.         

                                                                     

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .