2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சமுர்த்திக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2012 மே 14 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவை அதிகரித்து பொருட்களுக்குப் பதிலாக சமுர்த்தி வங்கிகளில் பணம் வைப்பிலிடப்படும் தேசிய நிகழ்வு நேற்று  சனிக்கிழமை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட  நிலையில்,  அம்பாறை மாவட்டத்திலும் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

கடந்த வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டமைக்கமைய சமுர்த்தி மானிய அதிகரிப்பை வழங்குவதற்கான நடவடிக்கையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு இலங்கை சமுர்த்தி அதிகாரசபையினூடாக மேற்கொண்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி வங்கிகளில் பணம் வைப்பிலிடப்பட்டு வங்கிப் புத்தகங்கள் கையளிக்கப்பட்டன.

அம்பாறை கரையோரப் பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைமுறையிலிருந்து வந்த  415 ரூபா, 250 ரூபா சமுர்த்திக் கொடுப்பனவு முத்திரைகளுக்குப் பதிலாக 750 ரூபா வழங்கப்பட்டது. இதில் 45 ரூபா சமூகப் பாதுகாப்பு நிதிக்காகவும் 10 ரூபா லொத்தர்  சீட்டிழுப்புக்காகவும் 100 ரூபா  சேமிப்புக்காகவும் ஒதுக்கப்பட்டு 595 ரூபா உடன் பணமாக பெறமுடியும்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கியில் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.எல்.ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.ஏ. றாஸீக்,  பிரதேசசபை உறுப்பினர்களான கே.நஜூமுதீன், ஏ.இல்லியாஸ், பள்ளிவாசல் தலைவர், சமுர்த்தி அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .