2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் பகிஷ்கரிப்பு

Super User   / 2012 மே 14 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்,எஸ்.மாறன்)


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

குற்றச்சாட்டிக்குள்ளான உத்தியோகஸ்தரொருவர் பல வாரங்களின் பின் மீண்டும் கடமைக்கு திரும்பியமைக்கு எதிராகவே இப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றது.

மேற்படி உத்தியோகஸ்தர் தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் சுகாதார அமைச்சுக்கு அறிவித்ததையடுத்து அவர் மீது நான்கு விசாரனைகள் நடாத்தப்பட்டு   முடிவுகள் எதுவும் வெளிவராத நிலையில் இன்று  அவர் கடமைக்காக வைத்தியசாலைக்கு வருகை தந்த போது வைத்தியசாலையின் ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள், சிற்றுழியர்கள் மற்றும் வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினர்கள் இணைந்து மேற்படி உத்தியோகத்தருக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.



You May Also Like

  Comments - 0

  • neethan Monday, 14 May 2012 09:55 AM

    இலங்கையில் ஊழல் நடக்கும் நிறுவனங்களில் உச்ச நிலையில் கிரிகெட் சபை முதலிடத்திலும் தொடர்ந்து சுகாதார திணைக்களம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டு இருந்தார், ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாக கடமைக்கு சமுகமளிக்காமல்,அவர்மீது நான்கு விசாரணை குழு நியமித்து அதன் முடிவுகள் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டும் எது வித நடவடிக்கைகளும் நிகழாமல் குறித்த நபர் வேலைக்கு தகுதியான வைத்திய சான்றினையும் சமர்ப்பிக்காமல், வேலைக்கு சமுகமளித்துள்ளது முதலிடத்தை சுகாதார அமைச்சுக்கு வழங்கலாம் என்பதை பறைசாற்றுகிறது. வைத்தியர்களே ஊழியர்களே மற்றும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரே உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Roomy Monday, 14 May 2012 10:28 AM

    Hello

    Reply : 0       0

    meenavan Monday, 14 May 2012 11:19 AM

    its pity an accountant spoiling image of a hospital, disgrace to the ministry official an its hierarchy, over to you health minister

    Reply : 0       0

    ஜெசீம் பூட்டோ Tuesday, 15 May 2012 06:16 PM

    இன்னுமா ஆர்ப்பாட்டம் வேண்டாம் நிம்மதியான வைத்தியபணிக்கு ஆதரவளியுங்கள், ஏதாவது பிரச்சினை இருந்தால் ஆர்பாட்டம் வேண்டாம் ஏழைகள் பாவம். குறிப்பிட்ட நபரை விரட்ட நம்மால் முடியும். அதாவது கல்முனையின் சிறந்த பணக்காரரால் முடியும். ஆகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் ஏழைகளே தயவு செய்து அரசாங்க பணிக்கு ஆதரவளியுங்கள்.

    Reply : 0       0

    One of you Saturday, 19 May 2012 09:59 PM

    மூன்ற ஆண்டு ஒழுங்காக வேலை செய்த கணக்காளரால் புதிய தலைமையுடன் மூன்று மாதம் இருக்க முடியவில்லை? இந்த புதிய தலைமை சண்டை இடும் ஐந்தாவது கணக்காளடர் இவர் என்பது யாருக்கும் தெரியாது போலும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .