2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மலையடிக் கிராமத்தில் நீண்டகாலம் கடமையாற்றிய கிராம அலுவலருக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2012 மே 15 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மலையடிக் கிராமம் - 02ஆம் பிரிவில் நீண்டகாலமாக கிராம அலுவலகராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற எம்.ரீ.எம்.நஸீரை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

நளீமி;யா மாதர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அப்பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் கலந்துகொண்டார். கிராம அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இலிலியாஸ், அப்பிரதேச விழிப்புக்குழுத் தலைவர் வை.எம்.இஸ்மாயீல், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.அஹமது நிஷக் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • najeem Wednesday, 16 May 2012 12:51 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .