2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

Menaka Mookandi   / 2012 மே 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினையொட்டி அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமொன்று நடத்தப்பட்டது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையிலிருந்து பிரதேச செயலகம் வரை சென்று மீண்டும் பாடசாலையினை வந்தடைந்த இந்த ஊர்வலத்தில் மாணவர்கள் நுளம்பு ஒழிப்பு தொடர்பான பல்வேறு சுலோகங்களை ஏந்தி வந்தனர்.

இந்த ஊர்வலத்தில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அக்கரைப்பற்றுப் பொலிஸார், கிராம சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தினை 07 வலயங்களாகப் பிரித்து – தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் ஒவ்வொரு நாளும் - ஒரு வலயமாக இவ்வாறான விழிப்புணர்வு நடவடிக்கைகளை நடத்துவதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் - தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தின் இரண்டாம் நாளான இன்று - இந்த ஊர்வலம் இடம்பெற்றது. நேற்று 14ஆம் திகதி ஆரம்பித்த தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் எதிர்வரும் 20ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .