2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 மே 15 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த மாதம்  துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும்  சந்தேக நபர்கள் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில்,   இவர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 31ஆம் திகதி அட்டாளைச்சேனை பாலத்திற்கு அருகில் காரில் சென்றவர் மீது முச்சக்கரவண்டியில் வந்தவர்கள்  துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இத்;துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் கூறப்படும் நபர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் தேடியபோதிலும், சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டியை மாத்திரமே பொலிஸார் மீட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்களை பொலிஸார் தொடர்ந்து தேடிவந்த நிலையில் அவர்கள் நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சரணடைந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .