2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களை குறைக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான செயலமர்வு

Suganthini Ratnam   / 2012 மே 15 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் குற்றச்செயல்களை குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் மாணவர்களின் ஒழுக்கம், வீதி ஒழுங்கு விதிகள், சட்டம் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வை பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமை நடத்தியது.

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா தேசிய கல்லூரியிலும்  அக்கரைப்பற்று அல்-சிராஜ் வித்தியாலயத்திலும் நடைபெற்ற இச்செயலமர்வில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எல்.எச்.முகைடீன், பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் ஆகியோர் கலந்துகொண்டு கையடக்கத்  தொலைபேசி, பேஸ்புக்கால்  ஏற்படும் பிரச்சினைகள், மதுபோதையால்  சமூகத்தில் ஏற்படும்
சீரழிவுகள் தொடர்பிலும் விளக்கமளித்தனர்.

பாடசாலைகளில் இவ்வாறான விழிப்புணர்வு செயலமர்வு தொடர்ந்து நடத்தப்படுமென  மக்கள் தொடர்பாடல்  பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .