2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் ம.வி.யிலிருந்து பல்கலைக்கு தெரிவாகுவோரின் கல்விச் செலவை பொறுப்பேற்பேன

Suganthini Ratnam   / 2012 மே 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களுடைய ஒரு வருடத்துக்கான கல்விச் செலவுகளை நான் பொறுப்பேற்கவுள்ளதுடன்,  அவர்களுக்கும் சிறந்த பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தவுள்ளேன் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார்.

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் இந்த முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் 09 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்ற மாணவனைப் பாராட்டிப் பரிசு வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

09 பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்ற யுவெந்திரா நிலாவாசன் என்னும் இம்;மாணவனை பதக்கம் அணிவித்துப் பாராட்டியதுடன், தனது சொந்த நிதியிலிருந்து வாங்கிய சைக்கிளையும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன  பரிசாக வழங்கினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை உற்சாகப்படுத்துவற்காகவே இவ்வாறான பாராட்டுகளையும் பரிசுகளையும் நாம் வழங்குகின்றோம். எதிர்வரும் சாதாரணதரப் பரீட்சையில் இந்தப் பாடசாலையில் இவ்வாறான சிறந்த பெறுபேறுகளை எத்தனை மாணவர்கள் பெறுகிறார்களோ அத்தனை பேருக்கும் சைக்கிள்களை பரிசாக நான் வழங்குவேன்' என்றார்.

இதன்போது சிறந்த சித்திகளைப் பெற்ற மேலும் நான்கு மாணவர்கள் பாடசாலை சார்பாக பதக்கம் அணிவித்துப் பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் வி.குணாளன், பாடசாலை அதிபர் திருமதி எல்.கோபாலப்பிள்ளை மற்றும் மாணவர்களின் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • appadiya Thursday, 17 May 2012 07:35 PM

    சரி, அதென்ன புதுசா கழுத்தில ஏதோ எல்லம் தொங்கிறது ? இது என்ன புது நடவடிக்கையா இருக்கு?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .