2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக யஹ்யா கான் நியமனம்

Super User   / 2012 மே 17 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளராக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.யஹ்யா கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீனால் நேற்று புதன்கிழமை கையளிக்கப்பட்டது.

கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பாக ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இவர் போட்டியிட்டார். யஹ்யா கான் முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனக் கடிதம் கையளிக்கும் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பளாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹூனைஸ் பாரூக்கும் கலந்துகொண்டார்


You May Also Like

  Comments - 0

  • ummpa Thursday, 17 May 2012 11:56 AM

    நியமனம் தொடரட்டும். ஆனால் வாக்குதான் இல்லாமல் இருக்கு?

    Reply : 0       0

    munaimakan Friday, 18 May 2012 01:20 AM

    கல்முனைக்கு இது போதாது

    Reply : 0       0

    mohideen Saturday, 19 May 2012 02:45 AM

    யாராகவிருந்தாலும் இல்லதவர்களுக்கு உதவி செய்யட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .