2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர சபையினால் முதற் தடவையாக பாராட்டி கௌரவிப்பு

Super User   / 2012 மே 18 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

 
பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிப்பதன் மூலம் ஏனைய மாணவர்களையும் ஊக்குவிக்கலாம் என கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசஹிப் தெரிவித்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த சாதாரன தரம், உயர் தரம் மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சையில்  அதி கூடிய திறமை சித்திகளைப் பெற்ற 300 மாணவர்களை முதற் தடவையாக கல்முனை மாநகர சபையி;னால் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இது தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. இதன்போது, மேயர் சிராஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் எதிர்வரும் மே 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இவ்வழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத், நாடாளுமனற உறுப்பினரகளான ஹஸன் அலி, எச்.எம்.எம்.ஹரிஸ் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.



You May Also Like

  Comments - 0

  • meenavan Friday, 18 May 2012 03:59 AM

    பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கல்வியியலாளரை கொண்டு கௌரவியுங்கள், அரசியலார்களை கொண்டு வழங்கும் கௌரவிப்பு எதிர்வரும் கிழக்குமாகாண சபை தேர்தலுக்கான முன்னோடி நாடி பிடித்தலேயன்றி வேறு எதுவாக இருக்கமுடியும்? நாளைய சமூகத்தின் தலைவர்களே உங்கள் சிந்தனைக்கு!!!!!!!

    Reply : 0       0

    AHAMED JUNAID Thursday, 24 May 2012 03:01 PM

    எமது எதிர்கால சந்ததியினரை அரசியல் இலாபத்திகாகப் பயன்படுத்தும் நடவடிக்கையாக இது இல்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .