2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சாரணர்களுக்கு சீருடை அன்பளிப்பு

Super User   / 2012 மே 18 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் நூற்றாண்டினை முன்னிட்டு - பாடசாலையின் சாரணர் அணியினருக்கான சீருடைகளை அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், மாவட்ட சாரண உதவி ஆணையாளருமான எஸ்.எல். முனாஸ் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வைத்தார்.

மேற்படி சீருடைகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் வி.ரி.எம். ஹனீபா மௌலவியிடம் பிரதேச சபை உறுப்பினர் முனாஸ் - சாரணர்களுக்கான சீருடைத் தொகுதியினை சம்பிரதாயபூர்வமாகக் கையளித்தார்.

இதேவேளை – பாடசாலையின் நூற்றாண்டு விழாக் குழுவினருக்காக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர் அன்பளிப்பாக வழங்கிய ஒரு தொகுதி சீருடைகளையும் இதன்போது, தவிசாளர் சார்பாக உறுப்பினர் முனாஸ் கையளித்தார்.

சாதனா பாடசாலை எனும் பெயருடன் 1912 ஆம் ஆண்டு ஆரம்பமான அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையானது இவ்வருடம் - தனது நூற்றாண்டினைக் கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • min Friday, 18 May 2012 02:48 PM

    வாழ்க எம் தாயே! உன் வளர்ச்சிக்கு என்றும் எம் அர்ப்பணிப்புக்கள் உரித்தாகும்.

    Reply : 0       0

    Mohamed Murshid M M Friday, 18 May 2012 07:40 PM

    அல்ஹம்துலில்லாஹ். எமது வாழ்த்துக்களும் இந்தப் பாடசலைக்கு உரித்தாகட்டும். இன்னும் பல வருடங்கள் முன்னேற அல்லாஹ்வின் அருள் கிட்டட்டும்.
    தூர தேசத்திலிருந்து..........முர்ஷிட் - பழைய ஆசான்.

    Reply : 0       0

    Anees sammanthurai Saturday, 19 May 2012 06:14 AM

    வாழ்த்துக்கள் பல கோடி வாழனும் பல்லாண்டு..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .