2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்ட செயலகத்தின் நடமாடும் சேவை

Super User   / 2012 மே 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

2013ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சி முன்னிட்டு அம்பாறை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த முதலாவது மக்கள் நடமாடும் சேவை  அம்பாறை கவான்திஸ்ஸ மகாவித்தியாலயத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் ஜனாதிபதி செயலகம், மாவட்ட செயலகம், ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், காணி சீர்திருத்த திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், தபால் திணைக்களம், கல்வித் திணைக்களம், விவசாயத்  திணைக்களம்,  தொழில் திணைக்களம்,  கூட்டுறவுத் திணைக்களம்,  சமூர்த்தி அதிகார சபை, இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் அரசாங்கத்தின் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட 82 நிறுவனங்கள் கலந்து கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்கின.

இச்சேவையின் போது பொதுமக்களினால் 800ற்கும் மேற்பட்ட பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதுடன் அனேகமான பிரச்சினைகள் அதே இடத்தில் தீர்த்து வைக்கப்பட்டன.

இதில் திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர, அம்பாறை அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ், ஜனாதிபதி செயலக அலுவலகத்தின் உயர் அதிகாரிகள்,  மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .