2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2012 மே 19 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ் )


தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உள்வாரி ஏழாவது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை காலை பல்கலைக்கழகப் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைகலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சிமுகம்மது இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதேவேளை,  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஸ்தாபக உபவேந்தர் எம்.எல்.ஏ. காதர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம் மற்றும் வணிக முகாமைத்துவம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பினை முடித்துக் கொண்ட 454 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.  

இதன்போது உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜெயந்த நவரட்ன பட்டமளிப்பு உரையினை ஆற்றினார்.











                                                                       

You May Also Like

  Comments - 0

  • AHAMED JUNAID Thursday, 24 May 2012 03:07 PM

    பாராட்டு,பாராட்டு பாராட்டு..................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .