2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருக்கோவில் வயல கல்வி பணிப்பாளராக சுகிர்தராஜன் நியமனம்

Super User   / 2012 மே 20 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

திருக்கோவில் வயல கல்வி பணிப்பாளராக ஆர்.சுகிர்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் சிபாரிசுக்கமைவாவே இந்நியமனம வழங்கப்பட்டுள்ளது.

கல்முனையை சொந்த இடமாக கொண்ட ஆர் சுகிர்தராஜன், தனது கடமையினை நாளை திங்கட்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.

மேற்படி சுகிர்தராஜன் - திருக்கோவில் வலயக் கல்விக் காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக  (நிர்வாகம்) கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கோவில் வயலக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திலகவதி கணேஷமூர்த்தி கடந்த 14ஆம் திகதி சேவையிலிருந்து இளைப்பாறியமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே – தற்போது ஆர் சுகிர்தராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் - கடந்த காலங்களில் சம்மாந்துறை மற்றும் கல்முனை வலயக் கல்வி அலுவலகங்களில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .