2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 மே 21 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்,  எஸ்.எம்.எம்.றம்ஸான்)


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக ஓலுவில் வளாகத்தில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் முன்னிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் அச்சி முஹம்மது இஷ்ஹாக் மாணவர்களுக்கான பட்டங்களை வழங்கினார்.

இதன்போது, கலை, வர்த்த முகாமைத்துவம் மற்றும் வர்த்தகத் துறைகளில் பட்டப் படிப்பினைப் பூர்த்தி செய்த 270 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

மேற்படி விழாவில் உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர எக்கநாயக்க பிரதம அதிதியாககவும், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கிரேக் பிரேக்ஸ் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். இதேவேளை, பல்கலைக்கழகத்தின் பதிவாளர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .