2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மறைவையடுத்து கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு

Super User   / 2012 மே 22 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மறைவையடுத்து, கிழக்கு மாகாண சபையின் இன்று செவ்வாய்க்கிழமைய அமர்வு அவசரமாக ஒத்திவைக்கப்பட்டது என மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை ஆரம்பமாகியது. எனினும்  மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மறைவு செய்தியை அடுத்து சுமார் 10 மணியுடன் சபை அமர்வுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

குறித்த மரண செய்தியையடுத்து சபையில் அவருக்கான அனுதாப பிரேரணை நிறைவேற்றப்பட்டு இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது எனவும்  மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மறைவு அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

மாகாண சபை உறுப்பினரின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே ஜெமீல் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் இவரின் இழப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச மக்களிற்கு பாரிய இழப்பாகும்.

மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றவே தொழிலாதிபராக இருந்த மசூர் அரசியலிற்குள் பிரவேசித்தார். அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆகிய பதவிகளின் மூலம் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அளப்பரிய பல சேவைகளை ஆற்றியுள்ளார்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .