2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய நுளம்பு வாரத்தையிட்டு சப்பயன் புல்லினம் அகற்றும் பணி

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாளிகைக் காட்டிலுள்ள தோணாவில் வளர்ந்து காணப்படும் ஒரு வகை புல் இனமான சப்பயன் புல் இனத்தை அகற்றும் பணி நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

காரைதீவு பிரதேசசபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதானத்தில் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் செல்லையா இராசையா பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிரமதான பணியினை ஆரம்பித்து வைத்தார். காரைதீவு பிரதேச செயலகம்,  காரைதீவு பிரதேச சபை, மாளிகைக்காடு பிரதேச கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள்,  காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளிர் தலைமையில்  பாடசாலை மாணவர்கள் இச்சிரமதானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .