2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாராட்டு விழா

Suganthini Ratnam   / 2012 மே 22 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக ஏ.எல்.எம்.சலீம் கடமையேற்று ஐந்து வருடங்கள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழாவொன்று நடைபெற்றது.

பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையில் இப்பாராட்டு விழாவை நடத்தினர். கல்முனை வலய கல்விப்பணிமனையின் கணக்காளர் எச்.எம்.ஏ.றஸீட், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் ஆகியோர் இதில் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வித்துறைக்கு சிறந்த சேவையாற்றிய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0

  • ACM jiffry Wednesday, 23 May 2012 07:22 AM

    அன்புள்ள ஆசிரியர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .