2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் ஜனாஸா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நல்லடக்கம்

Super User   / 2012 மே 23 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் ஜனாஸா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின்னர் பெருந்திரளான மக்கள் மற்றும் பிரமுகர்களின் பங்கேற்புடன் அட்டாளைச்சேனை பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நேற்றுக் காலை 7.30 மணியளவில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் காலமான மாகாண சபை உறுப்பினரின் ஜனாஸா – அவரின் சொந்த இடமான அட்டாளைச்சேனைக்கு பிற்பகல் 2.00 மணியளவில் விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.

அன்னாரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜனாஸாவினை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் வருகை தந்திருந்தனர்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மரணம் தொடர்பில் துக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் - பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நேற்று முழுவதும் மூடப்பட்டிருந்ததோடு, வெள்ளைக் கொடிகளும் தொங்க விடப்பட்டிருந்தன.

மேலும், மசூர் சின்னலெப்பையின் மரணம் தொடர்பில் அரசியல் கட்சிகள், பொது நிறுவனங்கள் தமது அனுதாபங்களையும் தெரிவித்திருந்தன.

You May Also Like

  Comments - 0

  • i,L,NASAR ADD CEB Wednesday, 23 May 2012 11:15 AM

    அல்லாஹ் அவரை சுவர்க்கவாதியாக்குவனாக

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .