2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பட்டதாரிகள் நியமனத்தில் அரசியல் செல்வாக்கு பிரயோகிக்கப்படுகிறது: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 மே 23 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தில் பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக நேர்முகப் பரீட்சைக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதங்களில் அரசியல் செல்வாக்குகள்  பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு நேர்முகப் பரீட்சைக்காக ஒரு சிலருக்கு இரு கடிதங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இம்மாதம் 28ஆம் 29ஆம் திகதிகளில் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் பட்டதாரிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட பட்டதாரிகள் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

கடந்த மாதத்தில் பட்டதாரிகள் நியமனமானது மூப்பு அடிப்படையிலும் ஆண்டு அடிப்படையிலும் வழங்கப்படுவது தொடர்பில் நாடாளுமன்றத்திலும் பேசியிருந்தேன். தமிழ் பேசும் பட்டதாரிகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்ட வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டால் அதனால் ஏற்படும் பாதகங்களுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

அரசியல்வாதிகளின் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படுவது தவறான நடவடிக்கை என பல தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இவ்வாறான செயற்பாடுகளினால் நீண்டகாலமாக அரசாங்க நியமனங்களுக்காக காத்திருக்கும் பெருந்தொகையான பட்டதாரிகள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக மாறும் சந்தர்ப்பங்களும் அதனால் பல வீண் விளைவுகளும் ஏற்படலாம். எனவே அரசாங்கம் இது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுத்தல் வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்  தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Wednesday, 23 May 2012 05:39 PM

    அரியநேந்திரன் எம்.பி. அவர்களே? பட்டதாரி நியமனங்களை கல்முனை மாநகர சபையை முன்னுதாரணமாக வைத்து (19 கடை பங்கீடு) இன விகிதாசாரப்படி வழங்கினால் என்ன? ஏற்றுகொள்வீர்களா?

    Reply : 0       0

    Rajee Friday, 25 May 2012 04:36 AM

    உங்களால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு இவ்விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இதில் என்ன அம்பாரை மாவட்டம் யாருக்காவது முதலில் வழங்கட்டும். அதை பாராட்டுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .