2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இரு சமய பாடசாலைகளுக்கு இடையிலான சினேகபூர்வ சந்திப்பு

Super User   / 2012 மே 25 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனையில் இரு சமய பாடசாலைகளுக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை சினேகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றது.

கம்பஹா, தொம்பே கல்விக் கோட்டத்தின் பூக்கோட குமாரி முல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவ குழுவினர், கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவர்களை சந்தித்து சினேகபூர்வமாக கலந்துரையாடினர்.

சமய பாடசாலையின் கலை, கலாசாரம், கற்றல், கற்பித்தல்  நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை கட்டமைப்பு போன்ற விடயங்களை கற்றறிவதற்கான சந்திப்பாகவே இது அமைந்தது.

குமாரி முல்ல முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஐ.எம்.ஆசிம் தலைமையிலான குழுவினரை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர் அருட் சகோதர் ஸ்டீபன் மத்தியு தலைமையிலான ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வரவேற்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .