2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீட்டுத் திட்டத்திற்கான காணிகளை கண்டறிவது தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2012 மே 25 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்துக்குரிய காணிகளை கண்டறிவது தொடர்பில் ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது, பிரதேசத்திலுள்ள பொருத்தமான அரச காணிகளை இனங்கண்டு, அங்கு குறித்த திட்டத்தின் கீழ் வீடுகளை நிர்மாணிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச். பியசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த தேசத்துக்கு மகுடம் வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கிணங்க, ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள மூன்று முக்கிய குளங்கள் புனரமைக்கப்படவுள்ளதோடு, குறிப்பிட்ட சில பாடசாலைகளின் பௌதீக வளங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

மேற்படி கூட்டத்தில் - கிழக்கு மாகாண அமைச்சர் ரி. நவரட்ணராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ். செல்வராஜா, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. ஜெகதீசன், ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தேசத்துக்கு மகுடம் வேலைத் திட்டத்திற்கிணங்க, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது, கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத் திட்டங்கள் குறித்து துறைசார் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .