2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பினை கல்முனை மேயர் பகிஷ்கரிப்பு

Super User   / 2012 மே 27 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பினை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் பகிஷ்கரித்துள்ளார்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தா கிழக்கு மாகாணத்திற்கு விஜயத்தினை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தார்.

கல்முனை பிரதி மேயரான சட்டத்தரணி நிசாம் காரியப்பரின் வேண்டுகோளிற்கினங்க கல்முனைக்கான விஜயத்தினை இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது, கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தலைமையிலான கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிகளுடனான சந்திப்பொன்றை உயர் ஸ்தானிகர் கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் மேற்கொண்டனர்.

எனினும், இச்சந்திப்பில் கல்முனை மாநகர மேயர் சிராஸ் மீராசாஹிப் உள்ளிட்ட 5 மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை தழிழரசுக் கட்சியின் உயர் பீட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்றமையினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்களும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

வழமையாக, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடனான சந்திப்பினை கல்முனை மாநர சபையில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மேற்கொள்ளும் நிலையில், இந்திய உயர் ஸ்தானிகருடனான சந்திப்பு மாத்திரம் கல்முனை இருதய நாதர் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கல்முனை மேயர் மேயர் சிராஸ் மீராசாஹிபை தொடர்பு கொண்டு வினவிய போது, இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

இது தொடர்பில், கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரியொருவருடன் தொடர்புகொண்ட போது, "மேயர் கலந்துகொள்ளாமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது" என்றார்.

எவ்வாறாயினும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுடனான சந்திப்பு சிறந்த முறையில் இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தனது கிழக்கு மாகாண விஜயத்தின் போது, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு முதலமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மேயர், ஏறாவூர் தவிசாளர் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • pottuvilan Monday, 28 May 2012 02:31 PM

    வேறு என்ன உள் வீட்டு சண்டைதான்,?எப்ப தான் திருந்த போகிறார்களோ?

    Reply : 0       0

    neethan Tuesday, 29 May 2012 01:52 AM

    இது சிறு பிள்ளை தனமான செயல்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .