2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் புதிய கட்டிடங்களுக்கான அடிக்கல் நடல்

Super User   / 2012 மே 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கான ஆராதனை மண்டபம் மற்றும் வகுப்பறை  கட்டிடங்களுக்கான அடிக்கல்லினை கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று திங்கட்கிழமை நட்டு வைத்தார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அதிபர் வி.ரி.எம். ஹனீபா மௌலவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கல்வியமைசர் பந்துல, மேற்படி கட்டிடங்களுக்கான அடிக்கல்லினை நட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க, 1,000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மூன்று மாடிக் கட்டிடமொன்றுக்கான அடிக்கல்லும், கல்வியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 மாடிகளைக் கொண்ட ஆராதனை மண்டபத்துக்கான அடிக்கல்லும் இதன்போது கல்வியமைச்சரினால் நடப்பட்டன.

இந்நிகழ்வில் - பாடவிதானம் மற்றும் இணைப்பாடவிதானங்களில் 2010ஆம் ஆண்டு முதல் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை சார்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள்  அமைச்சரால் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசனலி, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம். அப்துல் மஜீத், ஏ.எம். ஜெமீல் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கல்வியமைச்சர் பந்துல குணவர்தன – பாடசாலை அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 
 
                

You May Also Like

  Comments - 0

  • அ.க ஜெலீல் Tuesday, 29 May 2012 11:19 AM

    வாழ்த்துக்கள் உங்கள் அபிவிருத்தி தொடர நல்லவை நடக்கட்டும்

    Reply : 0       0

    S.Sinasudeen Ax Wednesday, 30 May 2012 06:27 AM

    வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்; உங்கள் அபிவிருத்தி தொடர நல்லவை நடக்கட்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .