2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் புதிய அதிபராக ஏ.ஆதம்பாவா நியமனம்

Super User   / 2012 மே 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின்  புதிய அதிபராக கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஏ.ஆதம்பாவா இன்று செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபராக கடமையாற்றிய எம்.எம்.இஸ்மாயில் கடந்த மே 27ஆம் திகதி ஓய்வுபெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, புதிய அதிபருக்கு பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,  கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்களினால் மகத்தான வரவேற்பளித்ததுடன் பதில் அதிபராக கடமையாற்றிய எம்.எஸ்.எம்.ஹம்ஸா தனது பொறுப்புக்களை புதிய அதிபரிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரீ.தௌபீக், கல்லூரியின் முன்னாள் அதிபர்களான ஏ.எம்.ஹுசைன், மர்ஜுனா ஏ காதர் மற்றும் ஏ.பீர்முஹம்மது உட்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.





You May Also Like

  Comments - 0

  • azeem Tuesday, 29 May 2012 01:39 PM

    இனியாவது முன்னேறுமா?

    Reply : 0       0

    SK Tuesday, 29 May 2012 06:17 PM

    மாஷா அல்லாஹ் எனது மனமார்த்த வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    mahir al sath Tuesday, 29 May 2012 06:27 PM

    புதிய அதிபருடன் கல்முனை ஸாஹிரா நிச்சயம் இமயமலை சாதனை புரியும்.

    Reply : 0       0

    Najeem Wednesday, 30 May 2012 09:52 AM

    புதிய அதிபருக்கு நல் வாழ்துக்க்கள்.

    Reply : 0       0

    M.A.Ahamed Zacky Thursday, 31 May 2012 09:53 AM

    என் உளமார்ந்த வாழ்த்துக்கள். சமூகக்கல்வி ஆசிரியர் சமூக கல்வியில் நிச்சயம் அக்கறை காட்டுவார். எங்களுக்கு வழி காட்டியது போல.

    Reply : 0       0

    bzukmar Thursday, 31 May 2012 09:53 AM

    கழுத்தறுப்பும் காய் வெட்டலும் இல்லை எனில், சாதனை கரைபுரளும் வாழ்த்துக்கள் அதிபரே.

    Reply : 0       0

    mmsajahan Tuesday, 05 June 2012 07:51 PM

    எங்கள் ஆசிரியர் எங்கள் பாடசாலை எங்கள் மக்கள் கல்வி எங்கள் கல்லூரி வாழ்த்துகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .