2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

லஞ்ச சந்தேக நபருக்கு அக்கரைப்பற்றில் சட்டவிரோதமாக பிணை வழங்கப்பட்டதாக முறைப்பாடு

Super User   / 2012 மே 30 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                         (ரி.பாருக் தாஜுதீன்)

லஞ்சம்  பெற்றமை தொடர்பான சம்பவமொன்றின் சந்தேக நபரை லஞ்ச மற்றும் ஊழல்கள்  தொடர்பான ஆணைக்குழுவின் ஆட்சேபத்திற்கு மத்தியிலும் அக்கரைப்பற்று நீதவான் பிணையில் செல்ல அனுமதித்ததாக கொழும்பு பிரதான நீதவானிடம் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சந்தே நபர் அக்கரைப்பற்று பஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாவார்.  ஆவணமொன்றில் கையெழுத்திடுவதற்காக பஸ் சாரதியிடமிருந்து 250 ரூபாவை பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லஞ்ச குற்றச்சாட்டுக்குள்ளான சந்தேக நபர்களை விடுவிப்பதற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றுக்கும் மேல் நீதிமன்றத்திற்கும் மாத்திரமே அதிகாரம் உள்ளது என மேற்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேற்படி சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட பிணை அனுமதியை இரத்துச் செய்த கொழும்பு பிரதம நீதவான், அச்சந்தேக நபரை ஜூன் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .