2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 ஜூன் 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறை, ஆண்டிட சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்மாந்துறையை நோக்கி மிக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அம்பாரை - கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆண்டிட சந்தியிலுள்ள எல் வளைவு சிக்னல் கம்பத்தில் மோதியதனாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் நிந்தவூர் 13ஆம் பிரிவை சேர்ந்த 22 வயதான முஹம்மட் செயின் நௌசாத் வயது என்பவரே உயிரிழந்தவராவர்.

அத்துடன்,   சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் நிந்தவூரைச் சேர்ந்த பழில் வாசிப் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • IMTHIYAZ HASSAN MOHA Monday, 04 June 2012 02:58 PM

    O Allah, forgive (name of the dead person). Make him among the guided ones, raise his status and be his deputy among the grieving. O Lord of the two worlds, forgive us and him and make his grave wide and full of light".

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .