2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த வளத்தாப்பிட்டி குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிப்பு

Super User   / 2012 ஜூன் 03 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனிபா)


அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் முற்றாக சேதமடைந்த அம்பாறை வளத்தாப்பிட்டி குளம் 90 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறித்த குளத்தினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, கிழக்கு மாகாண நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் மற்றும் நீர்ப்பானத் திணைக்களத்தின் உயர்அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்குளத்தினால் 1,100 ஏக்கர் வயல் நிலங்களுக்கு சீரான முறையில் நீர்ப்பாசனம் கிடைப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

இதேவேளை, 1930ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பயினன்ட கட்டு பாலம் என்றழைக்கப்படும் சம்மாந்துறை, கல்லரிச்சல் கட்டு பாலம் நீர்பாசன திணைக்களத்தின் 25 மில்லியன் ரூபா நிதியில் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்படடது.

பொறியியல் உதவியாளரான மஷ;றூப் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீhப்பாசன துறை மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன துறை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான ஏ.எம்.எம்.நௌஷாட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0

  • thawfeek Monday, 04 June 2012 12:52 AM

    வளத்தாப்பிட்டி குளம் புனரமைப்புக்கான செலவு 24 மில்லயன் ஆகும் 90 மில்லியன் என்பது தவறாகும்.

    Reply : 0       0

    pottuvilan Monday, 04 June 2012 04:38 PM

    விடுங்க பொஸ், இதுவெல்லாம் இலங்கையில் சகஜம், ஆசியாவின் அதிசயம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .