2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சேவை நலன் பாராட்டும் கௌரவிப்பு நிகழ்வும்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 05 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை மண்ணில் பிறந்த உபவேந்தர்கள், கலாநிதிகள் கௌரவிப்பும் ஓய்வுபெற்றோர் சேவை நலன் பாராட்டு விழாவும் சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார மற்றும் விளையாட்டு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

சம்மாந்துறை மாலை வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இதன் தலைவரும் முன்னாள் திட்டமிடல் பணிப்பாளருமான ஏ.ஏ.பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சம்மாந்துறையில் மண்ணில் பிறந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் கலாநிதி எம்.எல்.ஏ.காதர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், கலாநிதி எம்.ஐ.எம்.கலீல், கலாநிதி எஸ்.எம்.அகமட் லெவ்வை  ஆகியோர் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. ஓய்வுபெற்ற ஆசிரியர்களான பீ.எம்.எம்.இப்றாகீம், என். மஹ்றுப், எஸ்.எம்.இப்றாகீம் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0

  • mansoorcader Tuesday, 12 June 2012 05:53 AM

    மாலை வட்டம் வழமைபோல உயர்ந்த பணிசெய்துள்ளது. பாராட்டுக்கள். அதனைப்போல பாராட்டு பெற்றவர்களும் சாதனையாளர்களே. வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .