2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யானைகளின் தொல்லையால் மக்கள் இடம்பெயர்வு

Kogilavani   / 2012 ஜூன் 05 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

சம்மாந்துறை பிரதேசத்தின் இஸ்மாயில்புரம், வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களில் தொடர்ந்து இடம்பெறும் யானைகளின் தொல்லையால் அக்கிராம மக்கள் பலர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இக்கிராமங்களில் சில நாற்களாக இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக வருகை தந்து குடியிருப்புக்களையும், பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றமை அதிகரித்து காணப்படும் அதேவேளை, நேற்று அதிகாலை கூட்டமாக வந்த யானைகள் அங்கு காணப்பட்ட குடியிருப்பு தொகுதிகள் மரங்கள், வீடுகள் போன்றவற்றை சேதப்படுத்தி உள்ளன.

இது தொடர்பாக இஸ்மாயில்புரம் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத் தலைவி ஏ.கே.பௌசுல் வின்தி கூறுகையில்,

'இக்கிராமத்தில் யானைகளின் தொல்லை அடிக்கடி இடம்பெறும் போதிலும், சில நாற்களாக அது மிகவும் அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு இரவிலும் யானைகளின் அட்டகாசம் காணப்படுவதனால் எங்களால் நிம்மதியாக குடியிருப்புக்களில் வாழமுடியாதுள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து வருகின்றன. இந்த வாரத்திற்குள் மட்டும் ஆறு குடும்பங்கள் இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ளன' என்று தெரிவித்தார்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .