2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம்

Super User   / 2012 ஜூன் 06 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு இன்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கடின பந்து கிரிக்கெட் துறை தொடர்பில் கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா மற்றும் உதவி அதிபர் எம்.எஸ். முஹம்மட் ஆகியோருடன் கலந்துரையாடினர்.

கடின பந்து கிரிக்கெடில் ஈடுபடும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்குவது மற்றும் கிரிக்கெட் உபகரணங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்வது என என இதன்போது குறித்த அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஊவா மாகாண பயிற்றுவிப்பாளர் சமிந்த கொடிகார மற்றும் அம்பாறை மாவட்ட பயிற்றுவிப்பாளர் வசந்த குமார ஆகியோரே விஜயம் செய்தனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்கனவே கடினபந்து கிரிக்கெட் பயிற்சி தளமொன்று கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .