2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் முட்டை, பசும் பால் கட்டாயம் சேர்க்க உத்தரவு

Super User   / 2012 ஜூன் 06 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் முட்களையும், ஒரு நாள் பசும் பாலினினையும் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

கல்வி அமைச்சினால் வலய கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி திட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு குறித்த சுற்று நிருபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர் ஒருவருக்குரிய மதிய உணவுக்கான கொடுப்பனவும் தற்போது 21 ரூபாய் 50 சதமாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இந்தக் கொடுப்பனவு 20 ரூபாவாக இருந்தது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மேற்படி திட்டத்தினை கல்வி அமைச்சு அமுல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில், மாதமொன்றுக்கு 08 நாட்கள் தலா ஒரு முட்டை வீதம்  08 முட்டைகளும், நான்கு நாட்கள் தலா 150 மில்லி லீற்றர் அளவான பசும்பாலும் மாணவர்களின் மதிய உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேற்படி சுற்று நிருபத்துக்கு இணங்க, குறித்த மதிய உணவு நடைமுறையினைப் உடனடியாகப் பின்பற்றுமாறு, அக்கரைப்பற்று வலயக் கல்விக் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அதிபர்கள் கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் பணிப்புரை வழங்கினார்.

You May Also Like

  Comments - 0

  • ibnuaboo Monday, 11 June 2012 02:01 PM

    கூழ் முட்டை தண்ணி கலந்த பால் இல்லாம பிள்ளயளுக்கு குடுங்க. இத யாவாரமாக்காம சேவையா செய்யிங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .