2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

'நெனசல' அறிவகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்) 

கல்முனை அபிவிருத்திக்கும், முகாமைத்துவத்திற்குமான சபையினால் நடாத்தப்படும் 'நெனசல' அறிவகத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா நிகழ்வு நேற்று மாலை கல்முனை அல்பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கணினித்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் கற்கை நெறியினை பூர்த்திசெய்த 180 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நெனசல கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.ஹாஜா கான் தலைமைiயில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சட்டத்தரணி யு.எம்.நிஸார் பிரதம அதிதியாக  கலந்து கொண்டதுடன்,  உதவிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி இஸட். ஏ.நதீர்,  கல்முனை கார்மல் பாத்திமா கல்லூரி அதிபர் அருட்சகோதரர் ஸ்ரீபன் மத்தியு, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அப்துல் மஜீட், கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் ஏ.எம்.எம். பரீட், அல்பஹ்ரியா மகா வித்தியாலய பிரதி அதிபர் எம்.ஏ.றஸாக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • mufeen Friday, 15 June 2012 10:12 PM

    மனிதன் வாழ்க்கையில் பெறவேண்டியது இது போன்றவை தான்
    மறக்க முடியாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .