2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனத்திற்கு மறு அறிவித்தல் வரை வியாபரத்தடை

Super User   / 2012 ஜூன் 12 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை பிரதேசத்தில் சுமார்  50 பேரை உடல் உபாதைகளுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுதிக்க காரணமாக இருந்த ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனம் மறுஅறிவித்தல் வரை வியாபரம் செய்வதற்கு கல்முனை மேயர் சிராஸ் மிராசாஹிப் தடைவிதித்துள்ளார்.

குறித்த ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனத்தை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.ஆரியராஜா மற்றும் உணவு மற்றும் மருந்து பொருட்கள் பரிசோதகர் எம்.தஸ்தகீர் ஆகியோருடன் மேயர் சிராஸ் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, ஐஸ் கிறீம் உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட பால்மாவின் தரத்தின் காரணமாகவே இவ்விளைவு ஏற்பட்டிருக்கலாம் என உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் பரிசோதகர் தெரிவித்தார்.

இதனையடுத்து,  ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனம் மறுஅறிவித்தல் வரை வியாபரம் செய்வதற்கு மேயர் சிராஸ் தடைவிதித்தார்.

இதேவேளை, குறித்த ஐஸ் கிறீம் உற்பத்தி நிறுவனத்தின் ஐஸ் கீறிமை உட்கொண்டதன் மூலம் உடல் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்ட மேயர் சிராஸ், உடல் ஆரோக்கியம் தொடர்பாக வைத்தியர்களிடமும் கேட்டறிந்துகொண்டார்.

பாண்டிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு மற்றும் பிறந்த தின வைபவம் ஆகியவற்றில் ஐஸ் கிறீம் உட்கொண்ட சுமார் 50 பேர் உடல் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0

  • ramzi Tuesday, 12 June 2012 08:49 AM

    கடை பெயர் என்ன?

    Reply : 0       0

    meenavan Tuesday, 12 June 2012 09:20 AM

    பழுதடைந்த பால்மாவின் உபயோகம் ஐஸ்க்ரீம் நஞ்சடைய காரணமாக இருக்குமா?

    Reply : 0       0

    nanpan Tuesday, 12 June 2012 10:56 AM

    அவர் தன் கடமையை செய்திருக்கின்றார்.........
    அவருடய பயணம் தொடர வாழ்த்துகள்.......

    Reply : 0       0

    Aboosulaim Tuesday, 12 June 2012 02:44 PM

    சபாஷ் தொடர்க உங்கள் சாதனைப் பயணம். யாருக்கும் அஞ்சாது குற்றமென்றால் நடவடிக்கை எடுங்கள் எமது மேயரே.

    Reply : 0       0

    Kanavaan Tuesday, 12 June 2012 07:01 PM

    அது சரி, இந்த மேயர் ஊரில் உல்ல ரோட்டுப் பக்கம் போய்ப் பார்க்க மாட்டாராமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .