2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் தவம் ராஜினாமா

Super User   / 2012 ஜூன் 14 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா, எஸ்.மாறன் )

அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து ஏ.எல்.தவம் இன்று வியாழக்கிழமை இராஜினாம செய்துள்ளார். இவர் அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது இராஜினாமா தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"நான் சார்ந்திருந்த தேசிய காங்கிரஸின் தீவிர உறுப்பினர் என்ற வகையில் எனக்கு பல துரோகங்களை இழைத்து வந்தனர். அதாவது, அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைவராக இருக்கும் போது பதவியேற்பு முதல் சுய அரசியலை முன்கொண்டு நடத்த இடையூறு விளைவித்ததுடன் எனக்கு எதிராக அவதூறுகள் மற்றும் வதந்திகளை திட்டமிட்டு பரப்பினர்.

கடந்த அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் என்னை வேட்பாளராக அறிவித்துவிட்டு பிரச்சார மேடைகளை எனக்கு எதிராக பயன்படுத்தியனர். பிரதேச சபையில் என்னால் நிமிக்கப்பட்ட 23 ஏழை தொழிலாளர்களை எனது விசுவாசி என்பதற்காக பணி நீPக்கியமை, என்னுடன் இணைந்து செயற்பட்ட அரச உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

விரிவான மக்கள் நோக்கமும் ஜனநாயகமும் இருந்தால் மட்டுமே ஒரு கட்சி ஊர் கடந்து மக்கள் மனங்களில் வியாபிக்க முடியும். இவ்வாறு நீண்டு செல்லும் வங்சகமும் குள்ளத்தனமும் கொண்ட தனி மனித அரசியலில் ஓர் அங்கமாக இருப்பதற்கு எனது மனச்சாட்சியும் எனக்கு வாக்களித்த மக்களும் உடன்படவில்லை.

அத்துடன், கடந்த ஒரு தசாப்த காலமாக அக்கரைப்பற்றில் ஏக அரசியல் பிரதிநிதித்துவம் வளர்ந்து பின்னர் அது நிலை தடுமாறிய பின்னணி பற்றி அக்கரைப்பற்று மக்கள் அறிய வேண்டிய அவசியமுள்ளது.

ஒரு காலத்தில் கூறுபட்;;டுக் கிடந்த அக்கரைப்பற்று அரசியல் களத்தின் பிரதிநிதித்துவத்தை ஈட்டிக் கொள்வதில் சிக்கல் நிலவியது. அதனை சரி செய்து ஊரை ஓரணியாக்கும் நல்ல நோக்கில் அப்போது செல்வாக்கிழந்து கிடந்த அரசியல்வாதி  ஒருவரை பலப்படுத்த நினைத்து அவரோடு இணைந்து 2004ஆம் ஆண்டு பொது தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.

அத்தேர்தலின் வெற்றியை முன்னுதாரனமாக கொண்டு நமது பிராந்தியத்துக்கான அரசியலை மக்கள் ஏற்றுக்கொண்டனர். அந்த மனோ நிலையையும் , அபிப்பிராயத்தையும் மக்கள் மத்தியில் கட்டமைப்பதற்கு நாம் நிறைய பாடுபட வேண்டியிருந்தது.

ஆனால் எமது அர்ப்பணிப்பையும் ஊழியத்தினையும் பிரயோசனப்படுத்திக் கொண்டது ஒரு தனிநபரும், ஒர் குடும்பமும் மட்டுமேயாகும். எமது மக்களின் அர்ப்;பணிப்போடு கிடைத்த பிரதிநிதித்துவமானது மக்கள் நலன் சார்ந்த தாராளமனப்பான்மை கொண்டதாக அல்லாமல் தனது இருப்பு தனது குடும்பத்தின் செழிப்பு என்பதற்கான தந்திரோபாயங்களையும், வருமான மீட்டும் குறுக்கு வழிகளையும் திரை மறைவில் திட்டமிட தொடங்கியது.

அதுமாத்திரமன்றி சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசினால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்ட ஆரம்ப கட்டத்திலேயே தடைகளை ஏற்படத்தியமை அதனை மக்களுக்கு பெற்றக் கொடுக்க நடவடிக்கை எடுக்காமை.

தனி நபர் ஒருவருடைய நலனுக்காக தொழில்நுட்ப கல்லூரியினை மூடிவைத்து 2,500 மாணவர்களின் தொழிற் கல்வியை சூனியமாக்கியமை. தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தில் ஒழிந்;து கொண்டமை. இது போன்ற பல்வேறு துரோகங்களையும் நாச வேலைகளையும் நமது பிரதிநிதியை மீண்டும் வரலாற்றுப் புள்ளியில் கொண்டு நிறுத்தியுள்ளது.

ஆதலால் நான் அங்கம் வகிக்கம் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் தேசிய காங்கிரஸ் அங்கத்துவத்திலிருந்தும் என்னை முழுமையாக விடுவித்து அகலமான பார்வைகளையுடைய மற்றுமொரு பயணத்திற்கு திடசங்கற்போம் பூனுகின்றேன்".

You May Also Like

  Comments - 0

  • azeez Thursday, 14 June 2012 10:57 AM

    நல்ல காரியம் செய்துள்ளீர்கள்.

    Reply : 0       0

    fareez Thursday, 14 June 2012 10:59 AM

    மாஷா அல்லாஹ்

    Reply : 0       0

    IBNUABOO Thursday, 14 June 2012 03:21 PM

    அரசியல்வாதியா அல்லது யதார்த வாதியா அல்லது யதார்த அரசியல் வாதியா?

    Reply : 0       0

    bishrullah Friday, 15 June 2012 03:27 AM

    வரம் கிடைக்காதலால் தவம் கலைந்தது!

    Reply : 0       0

    RAHIZ MOHAMED Friday, 15 June 2012 06:12 AM

    The basis of our political system is the right of the people to make and to alter their constitutions of government.

    வாழ்த்துக்கள் தவம்

    Reply : 0       0

    Atham kaka Friday, 15 June 2012 07:27 AM

    நல்லது செய்தாய் மகனே.. நீ அரசியலில் வெல்வாய்.

    Reply : 0       0

    Asver Friday, 15 June 2012 08:45 AM

    அன்பின் நண்பா எனது வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Asver Friday, 15 June 2012 08:47 AM

    God bless you

    Reply : 0       0

    கரயோரத்தான் Friday, 15 June 2012 09:05 AM

    தவம் ,
    காலம் கடந்தாவது தனிமனித அராஜகத்தை உணர்ந்தாய் மகனே.
    நீ இருக்க வேண்டிய அணி முஸ்லீம் காங்கிரஸ் அணி.

    Reply : 0       0

    rozan maruthanumai Thursday, 21 June 2012 09:45 AM

    நல்ல முடிவு நண்பா.

    Reply : 0       0

    Rafee Wednesday, 22 August 2012 07:53 AM

    தவம் நீங்கள் மாகாண சபையில் வென்று உங்கள் பவரை அமைச்சருக்குக் காட்டுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .