2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுனாமியினால் பாதிக்கப்பட்ட கரையோர கட்டிடங்களை அகற்ற கல்முனை மாநகர சபையினால் தீர்மானம்

Super User   / 2012 ஜூன் 14 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகரத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர கட்டிடங்களை அகற்றுவதற்கு மாநகர சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

சுனாமி அனர்த்த வலயத்தில் காணப்படும் இடிபாடிற்குள்ளான கட்டிடங்களினால் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதனாலும் கழிவுப்பொருட்களை இடுவதனாலும் குறித்த கட்டிடங்களை அகற்றி பூங்காவனங்களாக அல்லது விளையாட்டு மைதானங்களாக மாற்றி அமைக்கப்படவுள்ளன.

குறித்த கட்டிடங்களை இனங்காணும் பொருட்டு எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த பிரதேசங்களுக்கு மேயர் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • NIBRAS MANSOOR Wednesday, 20 June 2012 08:52 AM

    குறித்த திட்டத்தை வரவேற்கிறோம். எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி சுனாமி அனர்த்த ஞாபகார்த்த தடயங்களையும் பாதுகாக்க மாநகர சபை முன்வர‌ வேன்டும்.

    Reply : 0       0

    kamil Thursday, 21 June 2012 10:05 AM

    வாசகர் நிப்ரசின் கருத்தை மாநகர சபை அமுல்படுத்த வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .