2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஒலுவில் துறைமுக நிர்மாண பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தன பார்வை

Super User   / 2012 ஜூன் 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஒலுவில் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை கண்டி மாவட்ட ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தன தலைமையிலான குழுவினர் நேற்று சனிக்கிழமை பார்வையிட்டதோடு, அதன் முன்னேற்றங்கள் குறித்தும் உரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீளமைப்பு நடவடிக்கைகளுக்காக பொத்துவில் தொகுதிக்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தன, ஊவா மாகாண சபையின் ஆளுங்கட்சி தலைவர் எஸ்.ஏ.ஆர். பந்துசேன உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.

இதன்போது துறைமுகங்கள் திட்டப் பணிப்பாளர் கருணாரத்னவும் சமூகமளித்திருந்தார். இதற்கு முன்னதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளப்பு தொடர்பில் அட்டாளைச்சேனை மெத்தா சமாஜ காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றிலும் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் வீரவர்த்தன கலந்து கொண்டார்.

சட்டத்தரணி ஏ.சி. கசுறுத்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபை பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.நஜீப் உள்ளிட்ட பல அதிகாரிகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • hamthoon Wednesday, 20 June 2012 10:28 AM

    பார்க்கலாம் நடப்பதை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .