2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கட்டுத்துப்பாக்கி வெடித்து விவசாயி பலி

Suganthini Ratnam   / 2012 ஜூலை 06 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் மிருக வேட்டைக்காக மரமொன்றில் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த  கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் விவசாயியொருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

விநாயகபுரம் முதலாம் பிரிவைச் சேர்ந்த இரு  பிள்ளைகளின் தந்தையான தர்மரத்தினம் தவக்குமார் (வயது 27) என்பவரே பலியானவராவார்.

கஞ்சி;குடியாறு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக் காவலில் நேற்று வியாழக்கிழமை இரவு பூராகவும் ஈடுபட்டிருந்த இவ்விவசாயி, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை  அருகிலுள்ள காட்டுக்;கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆளில்லாமல் சுயமாக செயற்படும் வகையில்  இக்கட்டுத்துப்பாக்கியில் நூல் தொடுக்கப்பட்டு   மரமொன்றில் வைக்கப்பட்டிருந்தது. இந்நூலில் இவ்விவசாயின்  கால் தடக்கியபோது இக்கட்டுத்துப்பாக்கி வெடித்ததாகவும் இதன்போது விவசாயி பலியானதாகவும் பொலிஸார் கூறினர். 

இச்சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .